| |
|
|
|
| |
ஐ.நா இலங்கையில் அதன் பணியை 1952ம் ஆண்டு ஆரம்பித்தது. ஐ.நா. அபிவிருத்தி வேலைத்திட்டத்தைப் பெற்றிருக்கும் முதல் நாடுகளில் ஒன்றாக இலங்கையை ஆக்கியது. மூன்று ஆண்டுகளின் பின்னர் 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நாவின் ஓர் அங்கத்துவ நாடாக அனுமதித்தது.
அரசாங்கத்துடன் ஓர் தௌவான ஒப்பந்தத்தின்படி இலங்கையில் ஐ.நா செயல்படுகின்றது. புரிந்துணர்வூ ஒப்பந்தத்தில் இணக்கங் காணப்பட்டதற்கமைய அதன் சகல பணிகளும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. நிதிகளைப் பகிர்ந்தளிப்பதும் இதில் அடங்கும்.
ஐ.நா. 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மக்களின் வாழ்வில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அரசாங்கம், சிவில் சமுதாயம், பரந்துபட்ட அரச சார்பற்ற சமூகம், இருதரப்புக் கொடையாளிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் விரிவான, பரந்துபட்ட பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளது. நீண்டகால அபிவிருத்தி, அவசர காலங்கள் ஆகிய இரண்டின் போதும் பலதரப்பட்ட சவால்களைச் சமாளிக்க இந்தப் பங்காளித்துவத்தை உருவாக்கியிருக்கிறது. |
|
|
| |
|
|
| |
|
|